Friday 17 November 2017

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India, SAI) இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 1984இல் நிறுவப்பட்ட மீயுயர் தேசிய விளையாட்டு அமைப்பாகும். இதன்கீழ் பெங்களூரு, காந்திநகர், சண்டிகர், கொல்கத்தா, இம்பால், குவகாட்டி, போபால், இலக்னோ, சோனேபட் இடங்களில் அமைந்துள்ள ஒன்பது வட்டார மையங்களும் பாட்டியாலா, திருவனந்தபுரம் ஆகியவிடங்களில் அமைந்துள்ள இரண்டு விளையாட்டுத்துறை கல்வி நிறுவனங்களும் உள்ளன. பாட்டியாலாவிலுள்ள நேதாசி சுபாசு தேசிய விளையாட்டுக் கழகத்திலும் பெங்களூரு, கொல்கத்தா போன்ற சில வட்டார மையங்களிலும் பயிற்றுநருக்கான கல்வியும் விளையாட்டு மருந்தியல் கல்வியும் வழங்கப்படுகின்றன. திருவனந்தபுரத்திலுள்ள இலட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரியில் உடற்பயிற்சிக் கல்வியில் பட்ட, பட்டமேற்படிப்பு கல்வித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் வட்டார மையங்களும் கல்விநிறுவனங்களும்

இந்தியாவிலுள்ள எசுஏஐ பயிற்சி மையங்கள்.
வ.எண்.
வட்டாரப் பகுதி
வட்டார மையம்/கல்வி மையம்
1.
வடக்கு
நேதாஜி சுபாசு தேசிய விளையாட்டுக் கழகம், பட்டியாலா, பஞ்சாப் பகுதி
2.
எசுஏஐ நேதாஜி சுபாசு வட்டார மையம், சண்டிகர்
3.
தேவிலால் வடக்கு வட்டார மையம், சோனிபத், அரியானா
4.
எசுஏஐ நேதாஜி சுபாசு வட்டார மையம், இலக்னோ, உத்தரப் பிரதேசம்
5.
நடுவண்
எசுஏஐ உத்தவ் தாசு மேத்தா நடுவண் மையம், போபால், மத்தியப் பிரதேசம்
6.
கிழக்கு
எசுஏஐ நேதாஜி சுபாசு கிழக்கு வட்டார மையம், கொல்கத்தா, மேற்கு வங்காளம்
7.
வட-கிழக்கு
எசுஏஐ நேதாஜி சுபாசு வடக்கு-கிழக்கு வட்டார மையம், இம்பால், மணிப்பூர்
8.
எசுஏஐ நேதாஜி சுபாசு வடக்கு-கிழக்கு வட்டார மையம், குவகாத்தி, அசாம்
9.
தெற்கு
எசுஏஐ நேதாஜி சுபாசு தெற்கு வட்டார மையம், பெங்களூர், கருநாடகம்
10.
இலட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரி, திருவனந்தபுரம், கேரளம்
11.
மேற்கு
எசுஏஐ நேதாஜி சுபாசு மேற்கு வட்டார மையம், காந்திநகர், குசராத்து
இவற்றைத் தவிர இமாச்சலப் பிரதேசத்தில் சிலரூ என்றவிடத்தில் உயர்ந்த உயரத்தில் பயிற்சி வழங்கும் மையம் உள்ளது.

விளையாட்டரங்கங்கள்

இந்த ஆணையத்திடம் தில்லியிலுள்ள கீழ்க்கண்ட ஐந்து விளையாட்டரங்கங்களைப் பராமரிக்கும், பயன்படுத்தும், மேம்படுத்தும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது:
  • இந்திரா காந்தி விளையாட்டரங்கம்
  • முனைவர்.சியாமாப் பிரசாத் முகர்ச்சீ நீச்சற்குள வளாகம்
  • முனைவர். கர்ணிசிங் துப்பாக்கிச் சுடும் களங்கள்

Monday 13 November 2017

வ. உ. சிதம்பரனார் துறைமுகம்

வ. உ. சிதம்பரனார் துறைமுகம்

வ. உ. சிதம்பரனார் துறைமுகம் (V.O.Chidambaram Port Trust) முன்னதாக தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். 2011 ஆம் வருடம் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.[1]தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள இந்தக் கடலோரச் செயற்கைத் துறைமுகம். 1974ஆம் ஆண்டு சூலை 11 இல் முதன்மைத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரும் துறைமுகமாகவும் கொள்கலன் முனையங்களில் கொச்சி, சவகர்லால் நேரு துறைமுகம், மும்பை மற்றும் சென்னைத் துறைமுகங்களுக்கு அடுத்ததாக இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் துறைமுகமாகவும் விளங்குகிறது. 2008ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 13 வரை 10 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக சரக்குகளை மேலாண்டுள்ளது.இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது.
கி.பி. 7 - 9 மற்றும் கி.பி. 10 - 12 காலகட்டங்களில் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் பயன்பாட்டில் இயற்கைத் துறைமுகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

வரலாறு

வில்லியம் என்றி சாக்சன் வரைந்த பழங்காலத் துறைமுகக் காட்சி
தூத்துக்குடி பல நூற்றாண்டுகளாகவே முத்து வளர்ப்பிற்கும் கடல்சார் வணிகத்திற்கும் பெயர்பெற்றிருந்தது. மிகுந்த வளமிக்க பின்னிலத்தையும் இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டிருந்த இங்கு துவக்கத்தில் மர தூண் துறைகளும் பின்னர் திருகாணி தூண் துறைகளும் கட்டப்பட்டன. தொடருந்து இணைப்பு ஏற்பட்டபின்னர் துறைமுக மேம்பாட்டுப் பணிகள் முனைப்பாகத் தொடங்கின. 1868ஆம் ஆண்டில் தூத்துக்குடி ஓர் நங்கூரம் பாய்ச்சி கப்பல்கள் நடுக்கடலில் இருக்க படகுகள் மூலம் நிலத்துடன் தொடர்பு கொண்ட நங்கூரத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதலே பல மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இங்கு பெருகி வரும் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு அனைத்து வானிலைகளிலும் இயங்கக்கூடியத் துறைமுகம் அமைக்கத் திட்டமிட்டது. புதியதாகக் கட்டப்பட்ட தூத்துக்குடித் துறைமுகம் 1974ஆம் ஆண்டு சூலை 11 அன்று இந்தியாவின் பத்தாவது முதன்மைத் துறைமுகமாக திறக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டில் அதுவரை இயங்கிய தூத்துக்குடி சிறு துறைமுகமும் புதியதாகக் கட்டப்பட்ட பெரிய துறைமுகமும் இணைக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் நிர்வாகத்தில் வந்தன.

சர்வதேச சேவை

  • தென் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி சேவை வழங்கும் ஒரே துறைமுகம் தூத்துக்குடி ஆகும் .போக்குவரத்து நேரம் 22 நாட்கள் .
  • தூத்துக்குடி துறைமுகம் ஐரோப்பா (போக்குவரத்து நேரம் 17 நாட்கள் ) சீனா (போக்குவரத்து நேரம் 10 நாட்கள் ) மற்றும் செங்கடல் (போக்குவரத்து நேரம் 8 நாட்கள் ) ஆகியவற்றுக்கு நேரடி வாரந்திர போக்குவரத்து சேவை வழங்குகிறது .வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

    அமைவிடம்
    நாடு இந்தியா
    இடம் தூத்துக்குடி, தமிழ்நாடு
    ஆள்கூற்றுகள் 8.4730°N 78.1215°Eஆள்கூற்று: 8.4730°N 78.1215°E
    விவரங்கள்
    உரிமையாளர் வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம், இந்திய அரசு
    துறைமுகம் வகை இடைநிலை கடலோரத் துறைமுகம் (செயற்கை)
    துறைமுகத்தின் அளவு 960 ஏக்கர்கள் (388.8 எக்டேர்கள்)
    நிலப் பரப்பு 2150 ஏக்கர்கள் (870.75 எக்டேர்கள்)
    ஊழியர்கள் 1,162 (2009-10)
    முதன்மை வணிகம் தொழில்துறை நிலக்கரி, செறிவூட்டிய செப்பு, உரம், வெட்டுமர கட்டைகள், இரும்புத் தாது
    முதன்மை இறக்குமதி: நிலக்கரி, சிமிட்டி, தயாரான உரம், கச்சா உரப் பொருள்கள், பாசுபேட்டுக் கற்கள், பெட்ரோலியப் பொருட்கள், பெட்ரோலியக் கோக் மற்றும் உணவு எண்ணெய்கள்
    முதன்மை ஏற்றுமதி: பொதுச் சரக்குகள், கட்டிடப் பொருட்கள், திரவநிலை சரக்குகள், சர்க்கரை, கிரானைட்டு, லிமோனைட்டு தாது
    UN/LOCODE INTUT
    புள்ளிவிவரங்கள்
    ஆண்டு சரக்கு டன்கள் 23.787 மில்லியன் டன்கள் (2009-10)
    ஆண்டுக்கான சரக்குப் பெட்டக
    கொள்ளளவு     4,67,752 (81,68,603 டன்கள்) (2010-2011)

Sunday 12 November 2017

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 8ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரும் ஆவார். தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

அரவிந்த் கெஜ்ரிவால் அரியானாவிலுள்ள இசாரில் 1968 ஆம் ஆண்டு‍ ஆகஸ்டு‍ 16 ஆம் நாள் பிறந்தவர். கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த ராம் கேஜ்ரிவால், தாய் கீதா தேவி. ஐஐடி கரக்பூரில் 1989 ஆம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றவர். 1992ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைப் பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த்துறைப் பணியில் (IRS) சேர்ந்து தில்லியில் வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்தார். அங்கு பணி புரியும்போது அரசுத்துறையில் தகவல்கள் வெளிப்படையாக இல்லாமையே ஊழலுக்கு வழிவகுப்பதை உய்த்தறிந்தார். தான் பணியில் இருக்கும்போதே ஊழலுக்கு துணைபுரியும் செயலாக்கங்களை மாற்றவும் எதிர்க்கவும் போராடி வந்தார். வருமானத்துறை அலுவலகத்தில் ஒளிவின்மையைக் கொண்டுவரப் பல மாற்றங்களை துவக்கி வைத்தார்.
சனவரி 2000 ஆம் ஆண்டில் தற்காலிக பணிஓய்வு பெற்றுக்கொண்டு பரிவர்த்தன் என்ற தில்லியை மையமாகக் கொண்ட குடிமக்கள் இயக்கமொன்றைத் துவக்கினார். இது நியாயமான, ஒளிவுமறைவற்ற, பொறுப்புள்ள அரசாண்மைக்காகப் பாடுபடுகிறது. பெப்ரவரி,2006ஆம் ஆண்டில் முழுவதுமாக பணிஓய்வு பெற்றுக் கொண்டு பரிவர்த்தன் பணிகளில் இறங்கினார்.
அருணா ராய் போன்றவர்களுடன் இணைந்து தகவல் பெறும் உரிமைக்காக அமைதியான சமூக இயக்கத்தை நடத்தினார். 2001ஆம் ஆண்டில் தில்லியில் தகவல்பெறும் உரிமைச்சட்டம் நிறைவேறியது. நாட்டளவில் 2005ஆம் ஆண்டு நிறைவேறியது. அதன்பிறகும் சட்டத்தை ஏட்டளவில் நிற்கவிடாது மக்களறியும் வண்ணம் இந்தியா முழுவதும் பயணித்து பரப்புரை யாற்றினார். மேலும், தனது அமைப்பின் மூலம் இச்சட்டத்தின் மூலம் சிறப்பான தகவல்களைப் பெற்று அரசாண்மையில் மாற்றங்களைக் கொண்டு வருபவர்களுக்கு விருதுகள் வழங்கத் தொடங்கினார். இவ்வகையில் அரசின் செயல்களை மக்களும் கண்காணித்து பங்கேற்கத் தூண்டுகிறார்.
பெப்ரவரி6, 2007இல் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி 2006ஆம் ஆண்டுக்கான "ஆண்டின் சிறந்த இந்தியர்" பட்டத்தை பொதுமக்கள் சேவைக்காக அரவிந்துக்கு வழங்கியது.

அரசியல்

அண்ணா அசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டார். 26 நவம்பர் 2012ல் ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கி, 2013 இல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்து மக்களின் ஆதரவைப் பெற்றார். 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தில்லி முதல்வர் பதவியில் இருந்த சீலா தீக்‌சித்தை புது தில்லி சட்டமன்ற தொகுதியில் 25,864 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார். திசம்பர் 28ஆம் தேதி டெல்லி முதல்வராகப் பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். சன லோக்பால் என்ற சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் அறிவித்த படி அவர் பதவி விலகினார்.
ஆதரவில் பிரச்சினைகள்
டெல்லியில் 38 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி அமைத்த இவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ., வினோத் குமார் பின்னியின் ஆதரவு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதையடுத்தும், 10.02.2014 முதல் முண்டுகா தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ., ரம்பீர் சோகீன் தனது ஆதரவை விலக்கிக்கொண்டதாலும் நெருக்கடி உண்டாகியது.

பதவி முடிவு

புது டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் 13.02.2014 அன்று அவையில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தார். இதில் ஆதரவு 27ம், எதிராக 42 பேரும் ஓட்டு அளித்தனர். ஆகையால் இது தாக்கல் ஆகவில்லை. அதனால் 14.02.2014 வெள்ளிக்கிழமை அன்று இவர் பதவி விலகினார்.
2014ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பங்கேற்பு
தம் முதல்வர் பதவியை விட்டு விலகுமுன் 2014 சனவரியில் கேஜ்ரிவால் தாம் இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அம்மாத இறுதியில் ஆம் ஆத்மி கட்சியினரின் வற்புறுத்தலால் கேஜ்ரிவால் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். மார்ச்சு 25ஆம் நாள் கேஜ்ரிவால் பா.ஜ.கட்சியால் பிரதமர் பதவிக்கென்று நிறுத்தப்பட்ட நரேந்திர மோடியை எதிர்த்து தாம் வாரணாசித் தொகுதியிலிருந்து பாராளுமன்ற இடத்திற்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

தில்லி சட்டமன்றம் (2015)

தில்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் புது தில்லி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு பாசகவின் நிபுர் சர்மாவை 31,583 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார். 2015 பிப்பரவரி 13ஆம் தேதி தில்லியின் எட்டாவது முதல்வராக பதவியேற்றார்.இவர் எந்த துறையையும் தனக்கு எடுத்துக்கொள்ளவில்லை. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் வெளியிட்ட அறிக்கையில் தலைமைச்செயலகத்தில் பணிபுரிபவர்கள் சனிக்கிழமையும் பணிக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளதால் அலுவலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது .

தனி வாழ்க்கை

கேஜ்ரிவாலின் மனைவி பெயர் சுனிதா. அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கேஜ்ரிவால் சைவ உணவு அருந்துபவர். பல ஆண்டுகளாக விபாசனா செய்துவருகிறார். சடங்கு சம்பிரதாயங்களை விரும்பாத அவர் தமது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை.

Saturday 11 November 2017

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

    இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 

    இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை ஜவகர்லால் நேரு அவர்களால் மிக வலுவாக இடப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கூறுகளாக இவர் குறிப்பிடுவது
    1. உலக அமைதி
    2. அணி சேராமை
    3. அடிமை மக்கள் விடுதலை பெறுதல்
    4. இனவேற்றுமை ஒழித்தல்
    5. தனி நபர் மற்றும் தேசிய விடுதலையைக் கட்டிக் காத்தல்
    6. உலகின் பெரும்பகுதி மக்களைப் பிடித்து வாட்டும் ஏழ்மை, நோய் ஆகியவற்றைப் போக்குதல்

    குறிக்கோள்கள்:

  • இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய சர்வதேச சூழலை உருவாக்குவது
  • உலகமய சூழலுக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது
  • வல்லரசு நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது
  • அண்டை நாடுகளுடனான, தெற்காசிய நாடுகளுடனான நல்லுறவையும், நட்பையும் மேம்படுத்துவது
  • இந்தியாவில் உள்நாட்டு சூழலை சர்வதேச இலக்குடன் ஒன்றிணைப்பது

    இந்தியாவின் இருதரப்பு உறவுகள்:

    இந்திய-அமெரிக்க உறவுகள்:

    இந்திய-அமெரிக்க உறவுகள் (India–United States relations) என்பது குடியரசு இந்தியாவிற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே உள்ள பன்னாட்டு உறவை குறிக்கும். அணிசேரா இயக்கத்தை உருவாக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், இந்தியா, பனிப்போரின் பொழுது சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. இது அமெரிக்க ஐக்கிய நாட்டினுடனான உறவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. 1991-இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு இந்தியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளினுடனான தனது வெளியுறவுக் கொள்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக இந்திய வர்த்தகம், பொருளாதாரம், கணினி நிறுவனங்களின் இணைப்பு ஆகியவை மேம்படத் தொடங்கியது. மேலும் இந்தியாவின் அணுசக்தி திட்டம் பற்றியான தனது கொள்கையை அமெரிக்கா மாற்றிக்கொண்டது. தற்காலத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கலாசாரம், ராணுவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மிகுந்த பங்களிப்புகளில் ஈடுபடுகின்றன.
    .கேல்லப் என்ற நிறுவனம் நடத்திய பொது கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்கர்கள் உலகில் உள்ள நாடுகளிலேயே இந்தியாவை ஏழாவது அபிமான நாடாக கருதுகின்றனர். 2012 ஆம் ஆண்டின்படி, அமெரிக்காவில் பயிலும் பன்னாட்டு மாணவர்களுள், இந்திய மாணவர்கள் இரண்டாவது பெரிய குழுமமாகும்.

    சமீபத்திய உறவுகள்:

    21ஆம் நாற்றாண்டில் இந்தியா அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. நூறு கோடி மக்கள் நிறைந்ததும், இந்திய துணைக் கண்டத்தில் ஆதிக்கமுடையதுமான இந்தியா, வளர்ந்து வரும் வல்லரசாகவும், அமெரிக்காவிற்கு இன்றியமையாத சகோதர நாடாகவும், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ளத்தக்கதாகவும் கருதப்படுகிறது. 2004இல் 2008 வரையிலான காலத்தில் இருதரப்பு வர்த்தகமும் மும்மட்ங்காக உயர்ந்துள்ளது. நவம்பர் 2010இல் இந்தியா வந்த பராக் ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்தின் இணைக்கூட்டத்தில் கல்ந்து கொண்டு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இடம்பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இராணுவ உறவுகள்:

    இரு நாடுகளின் இராணுவ உறவுகளும் சுதந்திரம், ஜனநாயகம், சட்ட ஒழுங்கை கடைப்பிடித்தல், பொதுவான பாதுகாப்பு நலன்கள், ஆகியவையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது, வன்முறை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பது, பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அதில் தொடர்புடைய பொருட்கள், தரவு, மற்றும் தொழில்நுட்பங்கள் பரவுவதை தடுப்பது, மற்றும் வர்த்தகத்தை பாதுகாப்பது ஆகியவைய இதனுள் அடங்கும்.
    2001 ஆம் ஆண்டின் செப்டம்பர் இறுதியில், அமெரிக்க அதிபர் புஷ் அணு ஆயுத பரவல் தடை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை முற்றிலுமாக விலக்கினார். இந்தியா சர்வதேச மரபுகளை எதிராக அணு ஆயுதங்களை உருவாக்கியதாலும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NNPT) கையெழுத்திடாததாலும் அமெரிக்கா இந்தியாவுடன் அணு ஒத்துழைப்பு எதிர்த்து வந்தது. ஆனால், டிசம்பர் 2006 இல், அமெரிக்க காங்கிரஸ், 30 ஆண்டுகளில் முதல் முறையாக, ஹென்றி ஜே ஹைட் அமெரிக்க இந்திய அமைதியான அணு ஒத்துழைப்பு சட்டத்தை தாக்கல் செய்து, இந்தியாவிற்கு நேரடி அணுசக்தி வணிகம் செய்ய அனுமதி அளித்தது.

    இந்தியா-ஜப்பான் உறவுகள்:

    இந்தியாவும் ஜப்பானும் காலம்காலமாக நல்லுறவுகளைப் பேணிவந்திருக்கின்றன. நூற்றாண்டுகளாக இந்தியாவும் ஜப்பானும் கலாச்சார பரிமாற்றங்களை பகிர்ந்துள்ளன. குறிப்பாக ஜப்பானின் முக்கிய சமயமான புத்த மதம் இந்தியாவில் பிறந்த புத்தரால் உருவாக்கபட்டதாலும் அதிக பிணைப்புகளை கொண்டுள்ளதற்கு ஒரு காரணமாக உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் இராணுவமும் சுபாசு சந்திர போஸின் தலைமையில் துவங்கப்பட்ட இந்திய இராணுவத்துடன் கூட்டமைத்து பிரித்தானியப் படையை எதிர்த்தது. இந்தியாவின் கட்டமைப்புப் பணிகளுக்கு அதிகம் நிதியுதவி செய்யும் நாடுகளில் ஜப்பானும் முன்னிலையில் உள்ளது. டெல்லி மும்பை இடையிலான தொழில்துறைக் கட்டமைப்புக்கு உதவியது.[1]
    ஜப்பானிய நிறுவனங்களான சோனி, டொயோட்டா, ஹோண்டா போன்றவை இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைத்துள்ளன. ஜப்பான் நிறுவனங்களுக்கு இந்தியா முக்கிய வியாபார சந்தையாக விளங்குகிறது. ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியாவில் கூட்டு நிறுவனமாக மாருதி சுசூக்கி என்கிற பெயருடன் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியுள்ளது.

    வர்த்தக உறவுகள்:

    இந்தியாவும் ஜப்பானும் 2011-ல் ஒருங்கிணைந்த சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்துகொண்டன . ஆனால் அதன் பிறகும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் அதிகரிக்கவில்லை.உதாரணமாக , 2012-13-ல் ஜப்பான் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பு சுமார் ரூ. 1,11,660 பில்லியனாக இருந்தது. ஆனால், இது இந்தியாவின் மொத்த வர்த்தக மதிப்போடு ஒப்பிட்டால் 2.2% முதல் 2.5%தான். அதுவும் ஜப்பானின் மொத்த வர்த்தக மதிப்போடு ஒப்பிட்டால் வெறும் 1%தான்.

    பாதுகாப்பு தொடர்பான உறவுகள்:

    2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே கலந்துகொண்டார்.அவர் வருகையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளில், ‘ஜப்பானில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்பு ஆணையத்துடன் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அடிக்கடி ஆலோசனை கலப்பது’ என்ற முடிவும் அடங்கும் . இந்தியக் கடற்படையும் ஜப்பானியக் கடற்படையும் 2013-ல் சென்னை அருகில் கடலில் கூட்டாகப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. இம்மாதிரியான கூட்டுப் போர் ஒத்திகைகளை இனி தொடர்ந்து அடிக்கடி மேற்கொள்ளும் முடிவும் எடுக்கப்பட்டது.

Friday 10 November 2017

சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு

சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு 

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

Thursday 9 November 2017

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resource Development) இந்திய அரசால் மனிதவளத்தின் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட அமைச்சகம் ஆகும். இது பள்ளிக் கல்வித் துறை என்றும் உயர் கல்வி அமைச்சகம் என்றும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. [1]

பொருளடக்கம்

படிப்பறிவு மற்றும் பள்ளிக் கல்வித் துறை,

இது நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் மக்களின் படிப்பறிவின் முன்னேற்றத்திற்கும் பொறுப்பெடுத்துக் கொள்கிறது.

உயர்கல்வி அமைச்சகம்

மாணவர்களின் உயர்கல்வி, மேற்படிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பெடுத்துக் கொள்கிறது.
இந்திய கல்விக் கழகங்கள் இந்த அமைச்சகத்தின் வரம்பிற்கு உட்படுகின்றன.

நிறுவன அமைப்பு

இந்த துறை எட்டு செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் செயற்பாடுகள் 100 க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் கையாளப்படுகிறது. [2]
  • தொலைதூர கல்வி மற்றும் கல்வி உதவி தொகை
  • யுனெஸ்கோ, சர்வதேச ஒத்துழைப்பு, புத்தக ஊக்குவிப்பு மற்றும் பதிப்புரிமை, கல்வி கொள்கை, திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு
  • ஒருங்கினைந்த நிதிப்பிரிவு.
  • புள்ளியியல், ஆண்டுத் திட்டங்கள் மற்றும் CMIS
  • நிர்வாக சீர்திருத்த, வட கிழக்கு பகுதிகள், SC / ST / ஓ.பி.சி பிரிவினர்
மேலும்:

Wednesday 8 November 2017

வான் போக்குவரத்து கட்டுப்பாடு

வான் போக்குவரத்து கட்டுப்பாடு

வான் போக்குவரத்து கட்டுப்பாடு (Air traffic control, ATC) அல்லது ஏடிசி என்பது புவித்தளத்தில் அமைந்த கட்டுப்பாட்டாளர்கள் நிலையத் தளத்திலும் வானிலும் வானூர்திகளை வழிகாட்டிட வழங்கும் சேவையாகும். இதற்காக கதிரலைக் கும்பா போன்ற பல்வேறு தொழினுட்பக் கருவிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இச்சேவையின் முதன்மைப் பணி வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாது பிரிப்பதாகும். வானூர்திகள் நேரப்படி இயங்கவும், போக்குவரத்து சீராகவும் விரைவாகவும் செல்லவும் வானூர்தி ஓட்டுனர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து ஆதரவளிக்கவும் வான் போக்குவரத்து கட்டுப்பாடு முதன்மை பங்காற்றுகிறது. [1] ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகளில் ஏடிசி பாதுகாப்பு அல்லது தடுப்புக் காவல் பணிகளையும் மேற்கொள்கிறது. பிரேசில் போன்ற வேறுசில நாடுகளில் ஏடிசிப் பணிகளை படைத்துறையினரே மேற்கொள்கின்றனர்.
உலகில் முதன்முதலாக வான் போக்குவரத்து கட்டுப்பாடு இலண்டன் கிரோய்டன் வானூர்தி நிலையத்தில் 1921ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று லாம்பெர்ட்-செயின்ட் லூயி பன்னாட்டு வானூர்தி நிலையமாக அறியப்படும் நிலையத்தில் வண்ணக்கொடிகளை வைத்து வானூர்திகளைக் கட்டுப்படுத்திய ஆர்ச்சீ லிக் குழுவினரே முதல் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்காக அறியப்படுகின்றனர்.
மோதல்களைத் தவிர்க்க வான் போக்குவரத்து கட்டுப்பாட்டில் பிரிப்பு என்ற சொல் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இரு வானூர்திகள் ஒன்றுக்கொன்று அருகாமையில் வராதிருக்க பக்கவாட்டு, நீளவாக்கு மற்றும் நெடுக்குத்து அச்சுகளில் குறைந்த பிரிப்பை பயன்படுத்துகின்றனர். இன்றைய நவீன வானூர்திகளில் ஏடிசிக்கு மாற்றாக மோதல் தவிர்ப்பு அமைப்புக்கள் நிறுவப்பட்டுள்ளன. பல நாடுகளிலும் ஏடிசி சேவைகள் பெரும்பான்மையான வான் பறப்புவெளி முழுமைக்கும் அனைத்து பயனர்களுக்கும் (தனியார், படைத்துறை மற்றும் வணிக பறப்புகள்) வழங்கப்படுகின்றன. கட்டுப்பாட்டாளர்களால் வானூர்திகள் பிரிக்கப்படுவதற்கு பொறுப்பாக உள்ள பறப்புவெளி கட்டுப்படுத்தப்பட்ட பறப்புவெளி எனப்படுகிறது. இதற்கு எதிராக ஏடிசியின் கட்டுப்பாட்டில் இல்லாது பறக்கக்கூடிய பறப்புவெளி கட்டுப்பாடற்ற பறப்புவெளி எனப்படுகிறது.
பறப்பின் தன்மை மற்றும் வானூர்தியின் வகைப்பாட்டைப் பொறுத்து வானோடிகளுக்கு பின்பற்ற வேண்டிய ஏடிசி ஆணைகளை இடுகின்றனர்; தவிர வானோடிகளுக்கு சீரான இயக்கத்திற்கு துணைபுரிய பறப்பு தகவல்களை வெளியிடுகின்றனர். இருப்பினும் அனைத்து நேரமும் வானூர்தியைக் கட்டுப்படுத்துகின்ற வானோடியே பறப்பின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பும் உடையவராவார்; இதனால் நெருக்கடி நேரங்களில் ஏடிசி ஆணைகளை இவர்கள் புறக்கணிக்கலாம்.

வான் போக்குவரத்து கட்டுப்பாடு பொறுப்புகள்

  • "புவித்தளக் கட்டுப்பாடு" - அனைத்து வானூர்திகள் மற்றும் பிற வண்டிகளின் நகர்வுகளை வான்கல வழிகள், செயலில் இல்லாத ஓடுதளங்கள், வானூர்தி நிறுத்துமிடங்கள் போன்றவிடங்களில் கட்டுப்படுத்துகிறது.
  • "அனுமதி வழங்கல்" - வானூர்திகளுக்கு வழித்தட அனுமதிகளை வழங்கும் பணியாகும். இது திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் பாதுகாப்பாக பறப்பதற்கு இது மிகவும் தேவையானதாகும். அனுமதி வழங்கல் பிரிவு புவித்தளக் கட்டுப்பாடுடனும் பரப்புக் கட்டுப்பாடு மையத்துடனும் ஒருங்கிணைந்து இயங்க வேண்டும்.
  • "கோபுரக் கட்டுப்பாடு" - புறப்படும் வானூர்திகளுக்கும் வந்திறங்கும் வானூர்திகளுக்கும் அனுமதி வழங்குகிறது. ஓடுதளத்திலும் பறப்புவெளி போக்குவரத்துச் சுற்றிலும் உள்ள அனைத்து வானூர்திகளும் கோபுரக் கட்டுப்பாட்டினாலும் கட்டுப்படுத்தப்படும்.
  • "அணுக்கக் கட்டுப்பாடு" - வானூர்தி நிலையத்தின் அண்மையில் உள்ள பறப்புவெளியில் உள்ள அனைத்து வானூர்திகளுக்கும் பொறுப்பானது. நிரம்ப வானூர்திகள் ஒரே நேரத்தில் இறங்குவும் ஏறவும் கூடுமாதலால் இந்தப் பொறுப்பே ஏடிசி பொறுப்புகளில் மிகவும் கடினமானப் பொறுப்பாகும்.
  • "பரப்பு கட்டுப்பாட்டு மையம்" இரு வானூர்தி நிலையங்களுக்கிடையேயான கட்டுப்படுத்தப்பட்ட பறப்புவெளியில் வானூர்திகளை பிரித்து வைக்கின்றன.

Tuesday 7 November 2017

தமிழ்நாடு வனத்துறை

தமிழ்நாடு வனத்துறை

 தமிழ்நாடு வனத்துறை தமிழக மாநிலத்திற்குட்பட்ட காட்டுப்பகுதிகளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது.
தமிழ்நாட்டின் வனப்பகுதி சுமார் 22,877 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. இது தமிழ்நாட்டுப் புவிப்பரப்பளவில் 17.59% ஆகும். தேசிய வனக் கொள்கை, 1988 இன் படி மாநிலமொன்றின் புவிப்பரவளவில் 33.33% வனங்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாறுபட்ட தட்பவெப்ப நிலை, இடவியல்பு, மண் (அ) நிலவியல்பு, நீராதாரம், உயர்நிலை மற்றும் உயிரினங்களின் ஆதாரங்கள் இவற்றை வைத்து பல்வேறுபட்ட சமூகக் காடுகள் அல்லது சமூதாய வனங்களை உருவாக்கும் காரணிகளாக செயல்படுகின்றன. பொதுவாக இவைகள் வனங்களின் வகைகள் எனப்படுகின்றன.
மாநில அரசு வனப்பகுப்பாக, நிறப்பிரிகையாக வனத் தாவர வளர்ச்சியை ஈரப்பதமுள்ள பசுமை மாறாக் காடுகள் முதல் குறை ஈரப்பதமுள்ள இலையுதிர் காடுகள் வரை தனது கவனத்தை செலுத்துகின்றது. மதிப்பிடற்கரிய மரங்களாக சந்தனம், தேக்கு மற்றும் கருங்காலி மரம் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, சோலைமந்தி (சிங்க வால் குரங்கு), சாம்பல் நிற அணில்மற்றும் அரிய வகை உட்பிரதேசத்திற்குரிய விலங்கினங்கள் மற்றும் எண்ணிலடங்கா இனங்களான முக்கிய மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசத்திற்குரிய தாவரங்கள்) இவற்றின் பாதுகாப்பு வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்துகின்றது.
தமிழ்நாடு மாநில வனச் சட்டம், 1882, வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, வனப் பாதுகாத்தல் சட்டம், 1980 மற்றும் அதன் துணை விதிகள் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இவ்வனங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகின்றது.

முன்னுரை

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் வனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வனங்களின் தட்பவெப்பநிலையை, சீராக வைப்பதுடன், மழைபெய்ய வைக்க முக்கிய காரணங்களாகவும் அமைகின்றது. ஆறுகளின் பிறப்பிடமாக, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளாக வனங்கள் திகழ்கின்றன.
பல்லுயிர் பெருக்கத்தின் புகலிடமாக விளங்கும் காடுகள் வனவிலங்குகளுக்கு உய்விடமாகவும், அரிய வகை மூலிகைகளுக்கு உறைவிடமாகவும், மலைவாழ் மக்களுக்கு அரணாகவும் விளங்குகின்றன. மண் அரிமானத்தை தடுத்து வேளாண்மையின் வளர்ப்புத் தாயாகவும் காடுகள் விளங்குகின்றன.
நச்சு வாயுக்களின் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறைந்து வரும் வேளாண்மை உற்பத்தி திறன் தண்ணீர் பற்றாக்குறை ம்ற்றும் அதிகரித்து வரும் வாயு மாசுக்கள் போன்ற முக்கிய காரணங்களினால் வனங்களின் முக்கியத்துவம் முன்பை விட தற்பொழுது உணரப்படுகின்றது.

பல்லுயிர் பெருக்கம்

பல்லுயிர் பெருக்கம் தாவரவினம்[3]
வ.எண் தாவரங்கள் எண்ணிக்கை
1 தமிழகத்தில் பூக்கும் தாவரங்கள்[3] 5640
2 இந்திய அளவில் பூக்கும் தாவரங்கள்[3] 17672 மட்டுமே
3 உள்ளூர் தாவர வகைகள்[3] 533
4 அரிய தாவரவகைகள்[3] 230
5 மூலிகைத் தாவர வகைகள்[3] 1022
6 பயிரிடப்பட்டு வரும் வளம் சார்ந்த தாவர வகைகள்[3] 260
  • இந்தியாவில் உள்ள 1022 பூக்காத தாவர வகைகளில் தமிழகத்தில் மட்டும் 184 வகைகள் உள்ளன.

பல்லுயிர் பெருக்கம் விலங்கினம்

பல்லுயிர் பெருக்கம் விலங்கினம்[3]

வ.எண் விலங்கினம் எண்ணிக்கை
1 தெளிந்த நீரில் வாழும் மீன் இனங்கள்[3] 165
2 *ஈரூடகவாழ் உயிரினங்கள்
(இரு வாழ்வி-நீர்நில வாழ்வி)[3][4][5]
76
3 ஊர்வன வகைகள்[3] 177
4 பறவையினங்கள்[3] 484
5 பாலூட்டிகள்[3] 187

பல்லுயிர் களஞ்சியம்

காப்பு வனப்பகுதிகளும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும் பல்லுயிர் களஞ்சியமாக திகழ்கின்றன.
தமிழ்நாட்டில் தாவரவளம் தட்பவெப்பம், நிலத்தன்மை, கடல்மட்டத்திலிருந்து உயரம் போன்ற பல்வேறு காரணங்களினால் மாறுபட்டு காணப்படுகின்றது.
இவை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.-;
  1. கடற்கரையோரத் தாவரவளம்
  2. தீவுகளில் உள்ளத் தாவர வளம்
  3. உட்புறச் சமவெளிகளில் காணப்படும் தாவரவளம்
  4. குன்றுகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ளத் தாவரவளம்

தாவரவளங்கள்

தாவரவளங்கள்[3]
வ.எண் தாவரவளம் வகைகள் காடுகள்
1 கடற்கரையோரத் தாவரவளம்[3] முகத்துவார, வெப்பமண்டல, வறண்ட மற்றும் பசுமை மாறாக் காடுகள்
2 தீவுத்தாவரவளம் உவர் சதுப்பு, சதுப்பு நிலக் காடுகள் [3]
3 சமவெளித் தாவரவளம்[3] தெற்கு வெப்ப மண்டல் முட்காடுகள்[3]
4 குன்று மற்றும் மலைகளில் உள்ளத் தாவரவளம்[3] வறண்ட இலையுதிர், ஈரப்பத இலையுதிர் மற்றும் சிறு பசுமை மாறா மற்றும் சோலைக்காடுகளையும், ஈரப்பதன பசுமை மாறாக் காடுகளையும் உள்ளடக்கியது.
  • முக்கியமான வன வகைகளில் புல்வெளிகளும், மூங்கில் மற்றும் நாணல் காடுகளும் அடங்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலை

முதன்மை கட்டுரை: மேற்குத் தொடர்ச்சி மலை

வனக்கொள்கை

தமிழகத்தின் வனக்கொள்கை மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள், தேசிய வனக் கொள்கையைச் சார்ந்து அமைந்துள்ளன.1988 இல் வகுக்கப்பட்ட தேசிய வனக் கொள்கையில் காடுகளை பராமரிக்கவும் அவற்றின் மேலாண்மைக்கு பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும், கோட்பாடுகளையும் விவரித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
வனக்கொள்கையின் முதன்மையான குறிக்கோள்
  • சூழலமைப்பை நிலைப்படுத்துதல்
  • மனித இனம், விலங்கினம் மற்றும் தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கு முக்கியமான சூழல் சமநிலை மற்றும் வளிமண்டல சமன்பாட்டுடன் கூடிய சூழலமைப்பை நிலை நிறுத்தி பராமரிப்பதாகும்.
  • வனங்களின் வளங்களை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்துதல் என்பது குறைந்த முக்கியமுடையதாக கருதவேண்டும்.

வனச்சட்டங்கள்

வனக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள்.
  • தமிழ்நாடு வனச்சட்டம், 1882,
  • தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம், 1949,
  • தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டம், 1955,
  • வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம், 1972,
  • தமிழ்நாடு வனப்பாதுகாப்புச் சட்டம், 1980,
  • பல்லுயிரினப் பரவல் சட்டம், 2002